கருணாநிதி ஒரு எலி.. அவரது எம்.எல்.ஏ.க்கள் தறுதலைகள்” ... சொல்கிறார் ஓபிஎஸ்

சட்டசபை, பொதுத்துறை ஆகிய மானிய கோரிக்கைகளுக்கு பதில் அளித்து பேசிய நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேசியபோது கூறியதாவது:
"கச்சதீவை மீட்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் கருணாநிதி வழக்கு தொடர்ந்துள்ளார். கச்சத்தீவை, தாரை வார்த்துவிட்டு, அதை மறைக்க இப்போது வழக்கு தொடர்ந்துள்ளார்.
கச்சத்தீவை மீட்க வேண்டும் என சட்டசபையில் கடந்த 3-ம் தேதி, அரசினர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘டெசோ' மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற உசுப்பி விட்டுள்ளது என, கருணாநிதி கூறியுள்ளார்.
மதம் கொண்ட யானை ஒன்று, வேண்டும் என்றே சிங்கத்திடம் சென்று வம்பு இழுத்ததாம். உடனே சிங்கம், யானையை ஓங்கி அறைந்ததாம். இதைக் கண்ட எலி, "நான் ஏற்கனவே யானையை ஒரு அறை அறைந்தேன்; அதை பார்த்துவிட்டுத் தான் சிங்கம், இப்போது அறைந்துள்ளது" என கூறியதாம். அதைப் போல் எலி நிலையில்தான், கருணாநிதி இருக்கிறார்.
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு வருவதில்லை. முதல்வரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது என்பதால் வருவதில்லை. ஊர் சுற்றும் இந்த தறுதலைகள், ‘சட்டசபையில் ஜனநாயகம் படும்பாடு' என்ற தலைப்பில் ஊர் ஊராக கூட்டம் போட்டு வருகின்றனர். உண்மையில், தி.மு.க.வினரால் சட்டசபை படும்பாடு என்ற தலைப்பில் தான் கூட்டம் நடத்த வேண்டும். ஏனெனில், சபை மரபுகள் எதையும் அவர்கள் மதிப்பது இல்லை" என்றார்.












Click it and Unblock the Notifications