புதைக்காதீங்க... அவர் கால் அசையுது: அஞ்சலி செலுத்தவர்கள் அலறி ஓட்டம்

Subscribe to Oneindia Tamil

ஜிவ்ரு: ஜிம்பாப்வே நாட்டில் இறந்ததாக கருதி புதைக்க முயன்றபோது உயிருடன் வாலிபர் எழுந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் ஜிவ்ரு என்ற ஊரை சேர்ந்தவர் பிரிக்டன் டாமா (வயது 34). திடீரென மயங்கி விழுந்த இவரை உடலில் எந்த அசைவும் இல்லாததால், இறந்து விட்டதாக கருதி விட்டனர் உறவினர்கள். இதனால் அவருக்கு இறுதி சடங்கு நிகழ்ச்சிகளும் நடந்தன.

கடைசியாக புதைப்பதற்காக, சவப்பெட்டிக்குள் உடலை வைத்து அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள். அப்போது அவருடைய காலில் லேசான அசைவு ஏற்பட்டதை ஒருவர் கவனித்து விட்டார். உடனே அவர் இதுபற்றி மற்றவர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதனால் பிரிக்டனை சவபெட்டிக்குள் இருந்து வெளியே எடுத்தனர்.

உடல் பகுதியிலும் அசைவு தெரிந்தது உறுதியானதால், உடனே அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உயிருடன் இருப்பது உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+