விழுப்புரத்தில் தி.மு.க. நகர செயலாளர் வெட்டி கொலை... பதற்றம்
விழுப்புரம்: விழுப்புரத்தில் தி.மு.க. நகர செயலாளர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சங்கராபுரம் தி.மு.க. நகர செயலாளராக இருப்பவர் முனுசாமி. இவர் கடந்த தி.மு.க. ஆட்சியில் சங்கராபுரம் பேரூராட்சி தலைவராக இருந்தவர். இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.
முனுசாமி நேற்று இரவு சங்கராபுரம் கடை வீதியில் தனியாக நின்று கொண்டிருந்தபோது, டாடா சுமோவில் வந்த மர்ம கும்பல் ஒன்று அவரை அரிவாளால் சாராமரியாக வெட்டியது. பல முறை வெட்டிய கும்பல் உடனே அந்த இடத்தை விட்டு தப்பி ஓடியது.
ரத்தவெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த முனிசாமியை அருகில் இருந்தவர்கள் மருத்துவமயில் சேர்த்தனர். முனுசாமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
ரியல் எஸ்டேட் தொழிலில் முனுசாமிக்கும் கடும் போட்டி இருந்துள்ளதால் முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாமா? என்ற கோணத்திலும் விசாரித்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
ஆள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் நடந்த கொலை சம்பவம் சங்கராபுரம் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications