எல்லோரும் வாய் நிறைய ‘அம்மா’ என்று அழைப்பது பெருமையாக உள்ளது: ஜெ. உருக்கம்!

நேற்று, சட்டசபையில் அரசின் ஈராண்டு சாதனைகளைப் பாராட்டி உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
அதில் அவர் கூறியதாவது, ‘எனது வாழ்க்கையில், போராட்டங்கள் நிறைந்த வாழ்கையில், எத்தனையோ பட்டங்களையும், விருதுகளையும் பெற்றிருக்கிறேன். ஆனால் கிடைத்தற்கரிய பெரிய பேறாக நான் கருதுவது எல்லோரும் வாய் நிறைய ‘‘அம்மா'' என்று அழைப்பதுதான். வயது என்னவாக இருந்தாலும், அனைவரும், பெரியவர்கள், இளையவர்கள், குழந்தைகள் அனைவருமே என்னை ‘அம்மா' என்று அழைப்பதை நான் பெருமையாக கருதுகிறேன்.
எல்லோருக்கும் நல்ல அம்மாவாக இருந்து கடமை ஆற்ற வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அம்மாவின் அன்பு தன்னலமற்ற அன்பு, சுயநலம் இல்லாத அன்பு. தமிழக மக்கள் நலனே என் நலன் என்று கூறி, தமிழக மக்களுக்கும், இந்த மாமன்ற உறுப்பினர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன் ‘ என இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.












Click it and Unblock the Notifications