விரைவில், சிபிஐக்கு தன்னாட்சி அதிகாரம்: ப. சிதம்பரம்
லண்டன்: மத்திய அரசு சிபிஐ அமைப்புக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கும் என்று அரசுமுறைப் பயணமாக வெளிநாடு சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கின் சிபிஐ விசாரணை அறிக்கையை மத்திய சட்டத்துறை அமைச்சகம் வாங்கி பார்வையிட்டு, அதில் திருத்தம் செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த உச்ச நீதிமன்றம், சிபிஐ, எஜமானரின் உத்தரவுக்கு ஏற்ப செயல்படும் ஒரு கூண்டுக்கிளி போல் உள்ளதாக சாடியிருந்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த கண்டனத்தை தொடர்ந்து, சிபிஐ-க்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக, அமைச்சரவை குழு ஒன்றை பிரதமர் மன்மோகன் சிங் அமைத்துள்ளார்.
நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான இந்த அமைச்சரவை குழுவில் கபில் சிபல், வி. நாராயண சாமி மற்று சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்றும், சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா சிறப்பு அழைப்பாளராக இக்குழுவில் இடம்பெறுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்ததாவது, ‘சிபிஐ அமைப்புக்கு தன்னாட்சி அதிகாரம் அளிப்பது குறித்து பரிசீலிக்க அமைக்கப்பட்டுள்ள எனது தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு, விரைந்து பரிசீலித்து சிபிஐக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கும். ஆனாலும், சிபிஐக்கு கண்காணிப்பு அமைப்பு ஒன்று வேண்டும். அந்த அமைப்பு உச்ச நீதிமன்றத்தின் கீழ் செயல்படும். அதாவது, சிபிஐயின் விசாரணையில் எந்த ஒரு அமைப்பும் தலையிட முடியாத வகையில் தன்னாட்சி அதிகாரம் வழங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது' என கூறினார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications