சாப்பிட வருபவர்களைக் கண்காணிக்கப் போகும் 'அம்மாவின் 3வது கண்'!
சென்னை: சென்னை மக்கள் மத்தியில் பெரும் பிரபலமாகியுள்ள மாநகராட்சியின் அம்மா உணவகங்களுக்கு கூட்டம் கட்டி ஏறிக் காதை அத்துக் கொண்டிருப்பதால் அசம்பாவிதங்களோ, வேறு குற்றச் செயல்களோ நடந்து விடாமல் தடுப்பதற்காக அங்கு தற்போது ரகசியக் காமராக்களை வைத்துக் கண்காணிக்கப் போகின்றனர். மேலும் வாட்ச்மேன்களும் நியமிக்கப்படவுள்ளனர்.
சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளும் அம்மா உணவகங்கள் என்ற பெயரில் மலிவு விலை உணவகங்கள் தொடங்கப்பட்டு செம ஹிட்டாகியுள்ளன.
ஆரம்பத்தில் இங்கு ஒரு இட்லி ரூ. 1க்கும், சாம்பார் சாதம் ரூ. 5க்கும், தயிர் சாதம் ரூ. 3க்கும் விற்பனை செய்யப்பட்டன.

மக்கள் மத்தியில் செம கிராக்கி
இந்த உணவகங்களுக்கு மக்கள் மத்தியில் குறிப்பாக ஏழைத் தொழிலாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கூட்டம் அலை மோதுகிறது.

குண்டா குண்டாவாக குவிக்கப்படும் இட்லிகள்
இட்லிக்குத்தான் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் பெருமளவிலான இட்லிகளை அவித்துக் குவிக்கிறார்கள்.

கூடுதலாக பொங்கல், லெமன் ரைஸ், கறிவேப்பிலை சாதம், சப்பாத்தி
தற்போது இந்த உணவகம் கூடுதலாக சப்பாத்தி, பொங்கல், லெமன் ரைஸ் ஆகியவற்றையும் தர ஆரம்பித்துள்ளது.

காலையில் பொங்கல் - மதியம் லெமன் ரைஸ்
காலையில் ரூ.5-க்கு பொங்கலும், மதியம் ரூ.5-க்கு எலுமிச்சை சாதம் அல்லது கறிவேப்பிலை சாதமும் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதே போல, மாலையில் ரூ.3-க்கு 2 சப்பாத்திகளும் வழங்கப்படும்.

அடேங்கப்பா... 1 கோடி இட்லிகள் விற்பனை
இதுவரை அம்மா உணவகங்களில் கிட்டத்தட்ட ஒரு கோடியே 75 லட்சம் இட்லிகளும், 35 லட்சம் சாம்பார் சாதங்களும், 22 லட்சம் தயிர் சாதங்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளனவாம்.

கண்காணிப்புக் கேமராக்கள்... வாட்ச்மேன்கள்...
அடுத்து, 200 அம்மா உணவகங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. அதேபோல வாட்ச்மேன்களும் நியமிக்கப்படவுள்ளனர்.
கண்டிப்பாக தேவைதான்... பொறாமைக்காரர்கள் ஏதாவது சில்மிஷம் செய்ய வாய்ப்புள்ளதே...












Click it and Unblock the Notifications