எவரெஸ்ட்டில் ஏறி சவூதி பெண் சாதனை!
ஜெட்டா: சவூதி அரேபிய நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் முதன்முறையாக எவரெஸ்ட்டில் ஏறி சாதனை புரிந்துள்ளார். அவர் எவரெஸ்டையும் சேர்த்து இதுவரை உலகின் ஏழு சிகரங்களையும் ஏறி சாதனை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் விளையாடவே கடும் கட்டுபாடுகள் உள்ள அரேபிய நாடான சவூதியில் முதன் முதலாக ராஹா முஹாராக் (25) என்ற ஒரு பெண், நேபாளத்தில் உள்ள உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் (8848 மீட்டர்) ஏறி நேற்று சாதனை படைத்துள்ளார்.
ஷார்ஜா பல்கலைக்கழகத்தில் பட்டம் பயின்று வருபவரான ராஹா, கடந்த ஏப்ரல் 13-ம் தேதி முதல் கடுமையான பயிற்சி எடுத்து, இச்சாதனையை செய்துள்ளாராம். அவரது அப்பா ஹாசன் இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்ததோடு, ராஹா எவரெஸ்ட்டுடன் உலகின் மற்ற ஏழு மலைச்சிகரங்களையும் அடைந்து தனது நோக்கத்தை நிறைவேற்றியுள்ளார் என்று அவர் கூறினார்.
பன்னாட்டு விளையாட்டு அமைப்பு கொடுத்த நெருக்கடியை அடுத்து, இரு விளையாட்டு வீரர்களை மட்டும் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள சவூதி அரசு கடந்த வருடம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications