யாசின் மாலிக் பேச்சுக்கு பாஜக பொன். ராதாகிருஷ்ணன் கண்டனம்
சென்னை: பிரிவினைவாதம் பேசும் யாசின் மாலிக்கை தமிழ்நாட்டிற்குள் அனுமதிப்பது ஆபத்தானது என்று பாஜகவின் மாநிலத்தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
கடலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று முன்தினம் நடந்த கருத்தரங்கில் காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் கலந்து கொண்டு பேசினார். அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பிரச்சினையும் இலங்கை தமிழர் பிரச்சினையும் முற்றிலும் வேறுபட்டவை காஷ்மீருக்கு மத்திய அரசு சிறப்பு மாநில தகுதியை அளித்துள்ளது. ஆனால், இலங்கை தமிழர்களே இழந்துவிட்ட தங்களது உரிமைகளை மீட்டதற்காக போராடி வருகின்றனர். அதற்காக இந்திய அரசின் உதவிக்காக காத்திருக்கின்றனர்.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட தர்மபுரி மற்றும் மரக்காணத்திற்குள் அரசியல் கட்சி தலைவர்கள் நுழைவதற்கு கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், யாசின் மாலிக்கைப் போன்ற பிரிவினைவாதியை தமிழ் நாட்டிற்குள் அனுமதிப்பது ஆபத்தானது என்பதை தமிழ்நாடு அரசு புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஞானதேசிகன் எச்சரிக்கை
இதேபோல் இந்திய இறையாண்மைக்கு எதிராக யார் பேசினாலும் தண்டிக்க வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:
நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு தடை விதிக்கப்பட்ட பிறகு, திருமண மண்டபத்தில் கருத்தரங்கமாக நடத்தப்பட்டது.அதில், ஜம்மு கஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்பின் தலைவரான யாசின் மாலிக் இதில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்தியாவின் இறையாண்மையக்கு எதிராக செயல்படும் யாசின் மாலிக் கடலூருக்கு வந்தது எப்படி? அவரை அங்கு அழைத்து வந்தவர்களுக்கு என்ன சம்பந்தம் என்றும் ஞானதேசிகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை தமிழர்களுக்காக பேசுவதாகக் கூறிக்கொண்டு, தமிழகத்தின் அமைதியை கெடுக்க விரும்புவர்களை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுபவர்களை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும் என்றும் ஞானதேசிகன் வலியுறுத்தியுள்ளார்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications