'முதலில் எங்களுக்குள் கூட்டணி அமையட்டும்'... திமுக கோஷ்டிப் பூசல் குறித்து கருணாநிதி சூசகம்!

திமுக சொற்பொழிவாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கருணாநிதி தலைமை தாங்கினார். பின்னர் செய்தியாள்கள் கருணாநிதியைச் சந்தித்தனர். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு கருணாநிதி அளித்த பதில்களும்...
கேள்வி: பேச்சாளர்களுக்கு இன்றைய கூட்டத்தில் என்ன சொல்லப்பட்டது?
பதில்: நன்றாக பேசுங்கள், தெளிவாக பேசுங்கள், கழகத்தின் கருத்துக்களை மக்களின் காதுகளில் போடுங்கள். மக்களின் இதயங்களிலே பதிய வையுங்கள். நாகரிகத்தோடு பேசுங்கள். பண்பாட்டோடு பேசுங்கள் என்று பேச்சாளர்களுக்கு சொல்லப்பட்டது.
கேள்வி: கூட்டணி பற்றி பேசப்பட்டதா?
பதில்: எங்களுக்குள் கூட்டணி வேண்டும் என்பதற்கு வலுவான காரணங்களைச் சொல்லியிருக்கிறேன்.
கேள்வி: தி.மு.க.,-பாட்டாளி மக்கள் கட்சிகளுக்கு இடையே கூட்டணி வரும் என்று செய்திகள் அடிபடுகின்றன. அதை பற்றி என்ன சொல்கிறீர்கள்?
பதில்: நீங்களே ‘‘அடிபடுகின்றன'' என்று சொல்லி விட்டீர்களே?
கேள்வி: திருமாவளவன், சீமான் பொதுக்கூட்டங்களுக்கு அ.தி.மு.க. அரசு தடை விதித்ததைப் பற்றி?
பதில்: தடை போடுவது, மாவட்டங்களுக்குள் நுழையக்கூடாது என்று தடுப்பது, இதுபோன்ற அரசாங்கத்தினுடைய சட்டங்களை, உத்தரவுகளை, ஏற்கனவே நான் மறுத்து எதிர்த்து அறிக்கை கொடுத்திருக்கிறேன் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications