ஐபிஎல் சூதாட்டத்தில் பாலிவுட் தொடர்பு: இந்தி நடிகர் தாரா சிங் மகன் கைது
மும்பை: ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் தாரா சிங்கின் மகன் விது தாரா சிங் இன்று மும்பையில் கைது செய்யப்பட்டார்.
மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் தாரா சிங்கின் மகன் விது தாரா சிங்(49). அவர் சில படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். 2009ம் ஆண்டு பிக்ஸ் பாஸ் ரியாலிட்டி ஷோவில் வெற்றி பெற்றார். இந்நிலையில் ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் வழக்கில் கைது செய்யப்பட்ட தரகர்களில் ஒருவரான ரமேஷ் வியாஸ் இந்த சூதாட்டத்தில் விது தாரா சிங்கிற்கு தொடர்புள்ளது என்று போலீசாரிடம் தெரிவித்தார். விது கிரிக்கெட் வீரர்களுக்கும், தரகர்களுக்கும் இடையே உள்ள ஆளாக செயல்பட்டதாக வியாஸ் தெரிவித்தார்.

இந் நிலையில் அல்பேஷ் படேல் என்ற இடைத்தரகரிடமிருந்து ரூ. 1.28 கோடியை மும்பை போலீசார் கைப்பற்றினர். இது ஸ்பாட் பிக்சிங்குக்காக வீரர்களுக்குத் தருவதற்காக ஹவாலா மூலம் இவருக்கு வந்து சேர்ந்த பணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
விது தாரா சிங் கைது செய்யப்பட்டிருப்பது தனக்கு பெரும் அதிர்ச்சி அளிப்பதாக பாலிவுட் தயாரிப்பாளரும், இயக்குனருமான மகேஷ் பட் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications