டாக்டருடன் கள்ளத் தொடர்பு: மனைவியை வெட்டிக் கொன்ற கூலித் தொழிலாளி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரம்பலூர் அருகே டாக்டருடன் கள்ளத்தொடர்பு கொண்டிருந்ததால், தன் மனைவியை வெட்டிக் கொன்ற கூலித் தொழிலாளி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ளது பூலாம்பாடி கிராமம். அங்கு கூலி வேலை செய்து வரும் சின்னசாமியின் மனைவி ஜெயலட்சுமி (34).

ஜெயலட்சுமிக்கும் சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த ஓமியோபதி டாக்டர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக உருமாறியது. இதுபற்றி தெரிய வந்ததும், சின்னச்சாமி அவர் மனைவியை கண்டித்துள்ளார். எச்சரித்த பின்னும் டாக்டருடனான கள்ளத் தொடர்பை ஜெயலட்சுமி கைவிடவில்லையாம்.

இந்நிலையில் ஜெயலட்சுமி கருவுற்றார். குழந்தை பிறந்ததும், பிரச்சினை வேறு விதத்தில் உருவாகியுள்ளது. அதாவது, இந்த குழந்தை கள்ளத்தொடர்பால் பிறந்தது என்று நினைத்த சின்னச்சாமி,அதனைக் கூறியே மனைவியிடம் சண்டை போட்டுள்ளார்.

சம்பவத்தன்று வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய சின்னச்சாமி மனைவி ஜெயலட்சுமியை ஆசைக்கு இணங்குமாறு அழைத்துள்ளார். மறுத்த ஜெயலட்சுமியை ஆத்திரத்தில் சின்னச்சாமி தலையில் அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதில், படுகாயம் அடைந்த ஜெயலட்சுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார். மனைவி இறந்ததை உறுதியானவுடன் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் சின்னச்சாமி.

ஆனால், அதற்குள் தகவல் அறிந்து அரும்பாவூர் போலீசார் அங்கு வந்து ஜெயலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக சின்னசாமியை கைது செய்த போலீசார் பின்னர் அவரை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+