எச்சில் இலையில் உருண்டா வாழ்வு சிறக்கும்: நேர்த்திக் கடன் நிறைவேற்றிய கரூர் பக்தர்கள்!
கரூர்: கரூர் அருகே உள்ள ஸ்ரீசதாசிவ பிரேமிந்திராள் ஜீவ சமாதியில், எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள நெரூரில், மானச சஞ்சரரே உள்ளிட்ட பல கீர்த்தனைகளை பாடிய ஸ்ரீசதாசிவ பிரேமிந்திராள் ஜீவசமாதி நினைவிடம் உள்ளது. இதில் வருடாவருடம் நடைபெறும் ஆராதனை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வர்.
இந்த ஆண்டு கடந்த 14 ஆம் தேதியன்று லிட்சார்ச்சனையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஊர்வலம்...
விழாவை முன்னிட்டு ஸ்ரீசதாசிவ பிரேமிந்திராள் உருவப்படம் அஹ்ரஹாரத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.
அன்னதானம்...
விழாவையொட்டி நடைபெற்ற அன்னதான நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு உணவருந்தினர்.
நேர்த்திக்கடன்...
உணவருந்திய பின்னர் அந்த எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
ஐதீகம்...
இவ்வாறு செய்வதன் மூலம் தங்களது வாழ்வு சிறக்கும், ஐஸ்வரியம் பெருகும் என்பது அவர்களின் ஐதீகம்.












Click it and Unblock the Notifications