ஜீயர் மறைவு எதிரொலி: ஜெயலலிதா ஸ்ரீரங்கம் நிகழ்ச்சியில் மாற்றம்?
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஸ்ரீரங்கத்தில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்வதாக இருந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேதியில் மாற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் உள்ள அஹோ பில மடத்தின் 45வது ஜீயர் சுவாமிகள் கடந்த 13ம் தேதி நள்ளிரவு முக்தியடைந்தார். அவரது உடல் ஸ்ரீரங்கம் பிருந்தாவனம் திருப்புட்குழியில் வைக்கப்பட்டது. இதன் எதிரொலியாக முதல்வர் விழா தேதியில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பேசிய அரசு உயர் அதிகாரி ஒருவர் , ‘முதல்வர் 24ம் தேதி ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வார் என முதலில் தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த விழா 27ம் தேதிக்கு மாற்றப்படலாம் என்ற நிலை உள்ளது. இந்த தேதியும் உறுதி செய்யப்படவில்லை' என்றார்.












Click it and Unblock the Notifications