தொடர் பவர் கட் தான் ஜெயலலிதாவின் 2 ஆண்டு சாதனை: மு.க.ஸ்டாலின் கிண்டல்

விழுப்புரம் அருகே சாலையாம்பாளையத்தைச் சேர்ந்த சதீஷ்-ரஞ்சனி ஆகியோரின் திருமணம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.
இந்த திருமண வரவேற்பு விழாவிற்கு திமுக மாவட்ட செயலாளர் பொன்முடி தலைமை தாங்கினார். திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அப்போது ஸ்டாலின் பேசியதாவது,
மணமகன் சதீஷ் எனது குடும்ப உதவியாளர் மட்டும் அல்ல. என் வீட்டிலும் ஒருவராக நாங்கள் மதிக்ககூடிய நபர் ஆவார்.
இன்று தமிழ்நாட்டில் எல்லோரும் அம்மா என ஒருவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். அந்த அம்மா செய்த சாதனை எல்லாம், எப்போதும் இல்லாத அளவில் தமிழகத்தில் மின் வெட்டு ஏற்படுத்தியது தான். ஏன் சட்டசபையில் கூட மின் தடை ஏற்பட்டது. இது தான் ஜெயலலிதாவின் இரண்டு ஆண்டு கால சாதனை.
நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து கொலை, கொள்ளை அதிகரித்து வருகின்றது. உயிர்பலிகளும் ஏற்பட்டு வருகிறது. விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மின்சாரத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை கூட குறைந்துள்ளது. இதுவும் அம்மா ஆட்சியில் நடைபெற்றுள்ள சாதனை தான் என்றார் கிண்டலாக.












Click it and Unblock the Notifications