'ஆன்லைன் லோட்டா'க்கு நிரந்தர தடை: மேற்கு வங்கத்தில் மம்தா உத்தரவு

பான்பராக், குட்கா போன்றவற்றிற்கு ஏற்கனவே தடை விதித்துள்ள மம்தாபானர்ஜி, தற்போது அந்த வரிசையில் ஆன்லைன் லாட்டரியும் சேர்ந்திருப்பதாக கூரியுள்ளார். இதனை எதிர்த்து யாராவது வழக்கு தொடுத்தாலும் அது அவர்களது உரிமை எனக் கருத்து தெரிவித்துள்ளார் மம்தா.
இது குறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது...
ஆன் லைன் லோட்டோ...
ஆன் லைன் லோட்டோ எனப்படும் லாட்டரிகள் இடதுசாரிகளின் ஆட்சியின்போது துவங்கப்பட்டது.
குடும்பத்தில் சண்டை...
இது ஓர் சமூக பிரச்சனையாக உள்ளது. இதனால் குடும்ப உறுப்பினர்களிடையே சண்டையும் சச்சரவும் ஏற்படுகிறது.
நிரந்தரத்தடை...
இந்த லாட்டரி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், பான்பராக், குட்கா ஆகியவற்றுக்கு விதித்ததை போல் நிரந்தரமாக ஆன்லைன் லாட்டரிகளும் நிரந்தரமாக தடை செய்யப்படுகின்றன.
டிவி குலுக்கல்களுக்கு தடை...
சில டி.வி. சேனல்கள் ஆன்லைன் லாட்டரி குலுக்கலை ஒளிபரப்பி வருகின்றன. இதை நான் அனுமதிக்க மாட்டேன்.
கோர்ட்டுக்கு போகும் உரிமை...
நான் விதிக்கும் தடையை எதிர்த்து கோர்ட்டுக்கு போக எல்லோருக்கும் உரிமை உண்டு. அது பற்றி எதுவும் கருத்து கூற முடியாது என இவ்வாறு மம்தா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications