புனே சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத்
Subscribe to Oneindia Tamil

மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் முதலில் 6 ஆண்டு சிறை தண்டனை சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் இந்த தண்டனை 5 ஆண்டாக குறைக்கப்பட்டது. ஏற்கெனவே ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால் மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து நடிகர் சஞ்சய்தத் மும்பை தடா நீதிமன்றத்தில் கடந்த 16-ந் தேதி சரண் அடைந்தார். பின்னர் அவர் மும்பை ஆர்தர் சாலை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு ஒரு மாதத்திற்கு வீட்டு சாப்பாடு, தலையணை. மருந்துகள் வழங்க மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில் மும்பை ஆர்தர் சாலை சிறையிலிருந்து புனேவில் உள்ள எரவாடா சிறைக்கு சஞ்சய்தத் மாற்றப்பட்டார்.












Click it and Unblock the Notifications