ஆகஸ்ட் 17ல் ஆசிரியர் தகுதித் தேர்வு: ஜூன் 17 முதல் விண்ணப்பம் விநியோகம்
சென்னை: 2013-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரும் ஜூன் 17-ஆம் தேதி முதல் விநியோகம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்களை பெறலாம்.
விண்ணப்ப கட்டணம் 50 ரூபாய். பொதுப்பிரிவினருக்கு தேர்வுக்கட்டணம் 500 ரூபாய். எஸ்.சி.எஸ்.டி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 250 ரூபாய்.
ஆகஸ்டில் தேர்வு
தகுதித் தேர்வு முதல் தாள் மற்றும் இரண்டு தாள் ஆகிய இரண்டையும் எழுதுபவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதித் தேர்வின் முதல் தாள் தேர்வு ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெறுகிறது. இரண்டாம் தாள் தேர்வு ஆகஸ்ட் 18-ஆம் தேதி நடத்தப்பட இருக்கிறது. இரண்டு தேர்வுகளும் காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறும்.
ஜூலை 1 கடைசி நாள்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்பத்தாரர் நேரடியாக ஒப்படைக்க வேண்டும். தபால் மூலமாகவோ, ஆன்லைன் மூலமாகவோ அல்லது ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்திற்கோ பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பக்கூடாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 1-ம் தேதி மாலை 5.30 மணி வரை அளிக்கலாம்.












Click it and Unblock the Notifications