அண்ணா பல்கலை. துணைவேந்தராகிறார் பேராசிரியர் ராஜாராம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தராக பேராசிரியர் ராஜாராம் தேர்வாகியுள்ளார். அவரது பெயரை ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ரோசய்யா தேர்வு செய்துள்ளார்.
மொத்தம் நான்கு பேர் கொண்ட பட்டியலிலிருந்து ராஜாராம் தேர்வு செய்யப்பட்டதாக ஆளுநர் மாளிகை வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ராஜாராம் தற்போது கோவை, அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். முன்னதாக இவர் நெல்லை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றியுள்ளார். பின்னர் இந்த பல்கலைக்கழகம், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு விட்டது என்பது நினைவிருக்கலாம்.
கடந்த 30 வருடமாக கல்விப் பணியில் இருந்து வரும் ராஜாராம் டிரிபிள் இ எனப்படும் எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜீனியரிங் போதிக்கும் ஆசிரியரும் ஆவார்.












Click it and Unblock the Notifications