நா அம்மா மாதிரி சாப்ட் இல்ல... டெரராக்கும்: எச்சரிக்கும் ராகுல்

விரைவில் வர இருக்கும் டெல்லி சட்டசபை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, நேற்று ஆலோசனை நடத்தினார்.
சுமார் 5 மணி நேரம் நீடித்தது இந்த ஆலோசனைக்கூட்டம். அது குறித்து ராகுல் காந்தி கூறியதாவது, ‘எதிர்வரும் டெல்லி சட்டசபை தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைவதற்கு நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி வெற்றியை தேடித்தர வேண்டும். அரசுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மற்றும் ஷீலா தீட்சித் தலைமையிலான டெல்லி அரசு ஆற்றியுள்ள சாதனையை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்குகள் சேகரிக்கும் பணியில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மேலிட தலைவர்கள் இப்போதே ஈடுபட வேண்டும்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மென்மையானவர். ஆனால், நான் அப்படியல்ல. ஒழுங்கீனத்தை என்னால் ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது' என இவ்வாறு ராகுல் உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications