பிக்சிங் செய்பவருக்கு 10 ஆண்டு சிறை… 5 லட்சம் அபராதம்: வருகிறது புதிய சட்டம்

Subscribe to Oneindia Tamil

Match-fixers to face 10 year jail – Central government
டெல்லி: மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடுவோருக்கு, 10 ஆண்டுகள் சிறைதண்டனையும் 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்க வகை செய்யும் புதிய சட்டம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

விளையாட்டுத்துறை அமைச்சர்

டெல்லியில் இன்று நடைபெற்ற மாநில விளையாட்டு கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் , கிரிக்கெட் சூதாட்டத்தை தடுப்பதற்கான புதிய சட்ட மசோதா, வருகிற மழைக்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும் என்றும், அதற்கு முன்னதாக மாநில அரசுகளுடன் இதுகுறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

10 ஆண்டுகள் சிறை தண்டனை

தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியளித்த மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் கூறியதாவது: மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள புதிய சட்டத்தின்படி ஸ்பாட் ஃபிக்சிங் மற்றும் மேட்ச் ஃபிக்சிங் போன்ற கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுவோர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குப் பதிவு செய்யப்படும். மேலும் 10 ஆணடு சிறைத்தண்டனையுடன், ரூ. 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+