இந்தியாவில் 16 அணுமின் நிலையம் அமைக்க நாங்க ரெடி.. ரசிய தூதர் தகவல்
டெல்லி: இந்தியாவில் 16 அணுமின் நிலையங்களை அமைக்க தங்களது நாடு தயாராக இருக்கிறது என்று இந்தியாவுக்கான ரசிய தூதர் அலெக்சாந்தர் எம் கிட்ஸகின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான தூதரகப் பணியில் 25 ஆண்டுகாலம் பணியாற்றியதை முன்னிட்டு அலெக்சாந்தர் எம் கிட்ஸகின் நேற்று ஒரு விழாவை நடத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவை நெருங்கிய, முக்கியமான நட்புநாடாக ரசியா கருதுகிறது. கூடங்குளம் அணுமின் நிலைய வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நான் வரவேற்கிறேன். மக்களின் நலனுக்காகவும், நாடு நிலையான வளர்ச்சி அடையவும் இந்த அணு மின் நிலையம் அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 16 புதிய அணு மின் நிலையங்கள் அமைப்பதற்கு உதவ தயாராக இருக்கிறோம்.
நாங்கள் இந்தியாவுக்கு பல உதவிகளைச் செய்துள்ளோம். இந்தியாவின் மீது கடும் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருந்த காலத்தில் நாங்கள் அணு எரிபொருளை இரண்டுமுறை வழங்கியுள்ளோம். அணு நீர் மூழ்கிக் கப்பலை இந்தியாவுக்கு அளித்துள்ளோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications