சிஏஜியாக சஷிகாந்த் ஷர்மா - நியமனத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு!

Subscribe to Oneindia Tamil

PIL filed in SC challenging Shashi Kant Sharma's appointment as CAG
டெல்லி: மத்திய கணக்குத் தணிக்கை துறையின் தலைவராக சஷிகாந்த் ஷர்மா நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மத்திய கணக்குத் தணிக்கை துறையின் தலைவராக இருந்த வினோத் ராய் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து சஷிகாந்த் ஷர்மா நியமிக்கப்பட்டார். பாதுகாப்புத் துறை செயலராக இருந்தவர் சஷிகாந்த் ஷர்மா. இவரது நியமனத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி, நாட்டின் பாதி பட்ஜெட்டே பாதுகாப்புத் துறைக்குத்தான் ஒதுக்கப்படுகிறது. அப்படிப்பட்ட துறையில் செயலராக இருந்தவர் ஒருவரை மத்திய கணக்குத் தணிக்கை துறையின் தலைவராக நியமித்திருப்பதன் மூலம் அவர் பதவி காலத்தில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய தளவாட கொள்முதல் விசாரணையை அவரே விசாரிக்கும் நிலைமை உருவாகி இருக்கிறது. இது நேர்மையானதாக இருக்காது என்று கூறியிருந்தார்.

இதே கருத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் இன்று பொதுநலன் வழக்கு ஒன்றும் தொட்ரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை ஜூலை மாதத்தில் நடைபெற இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+