3 சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு பிக்ஸிங்கில் தொடர்பு... விண்டு சிங் தகவல்

விண்டு சிங் கூறியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் யார் என்ற தகவலை மும்பை போலீஸார் வெளியிடவில்லை. விண்டு சிங் சொல்வது உண்மைதானா என்பதை பரிசோதித்து வருகின்றனர். உறுதியானதும், அந்த மூன்று வீரர்களும் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.
விண்டு சிங் கூறியுள்ள 3 வீரர்களில் ஒருவர் மூ்த்த வீரர் என்றும் கூறப்படுகிறது. இதனால் கிரிக்கெட் உலகில் மேலும் பரபரப்பு கூடியுள்ளது.
இதுகுறித்து மும்பை போலீஸ் இணை ஆணையர் ஹிமன்ஷு ராய் கூறுகையில், சிலரது பெயர்களை விண்டு தாராசிங் கூறியுள்ளார். அதை நாங்கள் பரிசோதித்து வருகிறோம் என்றார்.
மே 21ம் தேதி கைது செய்யப்பட்டார் விண்டு சிங். அவருக்கும், புக்கிகளுக்கும் நெருக்கமான தொடர்புகள் இருப்பது பின்னர் அம்பலமானது. மறைந்த பழம்பெரும் நடிகர் தாராசிங்கின் மகன்தான் இந்த விண்டு.
போலீஸ் விசாரணையின்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயலதிகாரி குருநாத் மெய்யப்பனுக்காக தான் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார் விண்டு என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications