ஐபிஎல் சூதாட்டத் தரகர் கிட்டி சிபிசிஐடி அலுவலகத்தில் சரண்… ரியல் எஸ்டேட் அதிபருக்கு தொடர்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஐபிஎல் சூதாட்டப் புகாரில் தேடப்பட்டு வந்த முக்கிய தரகரான கிட்டி என்பவர் சி.பி.சி.ஐ.டி போலீசில் சரண் அடைந்துள்ளார்.
ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக சென்னையில் தரகர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டள்ளனர். இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று இரவு முக்கிய தரகர் கிட்டி சரணடைந்தார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிசிஐடி காவல்துறை டிஎஸ்பி வெங்கட்ராமன், சூதாட்டத் தரகர்களுடன் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே, முக்கியக் குற்றவாளிகளாக கருதப்படும் 8 தரகர்கள் மற்றும் சஞ்சய் பாஸ்னா ஆகிய 2 பேரின் புகைப்படங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications