யாசின் மாலிக் போன்றவர்களால் தமிழ்நாடு சிதையும்…. இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலனின் எச்சரிக்கை

யாசின் மாலிக் காஷ்மீர் பயங்கரவாதி. நம் நாட்டுக்கு எதிராக செயல்படுபவர்.காஷ்மீரில் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த மாணவர்களையும்,இளைஞர்களையும் தூண்டிவிட்டு, ராணுவம் தங்களைத் தற்காத்துக் கொண்டால், இந்திய ராணுவம் அப்பாவி இளைஞர்களைக் கொன்று குவிப்பதாக நாடகமாடி வருபவர்.
ஆரம்பித்திலிருந்து மத்திய அரசு முஸ்லீம் ஓட்டுக்களை ஒட்டுமொத்தமாகப் பெறுவதற்காக பயங்கர வாதிகளிடம் சலுகைகளைக் காட்டி, மென்மையாக நடந்து கொண்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி இன்று அவர் உள்ளூர் தலைவர்களைக் கையில் போட்டுக் கொண்டு நாட்டுக்கு எதிராக விஷத்தைக் கக்கி வருகிறார்.
ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தி, ஜனநாயகத்தை அழிப்பது அவர்களுடைய தந்திரம். ஜனநாயகத்தின் பெயரால் பிரிவினைவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடம் கொடுப்பது ஜனநாயகத்தின் கோழைத்தனம். இந்த பயங்கரவாதி இலங்கைத் தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பதாகப் பேசுவது, சில நல்ல தலைவர்களை தன் வலையில் வீழ்த்தத்தான். தேசியத் தலைவர்கள் பயங்கரவாதத்தை நாசூக்காகக் கையாண்டு வளர்த்து விட்டதால், இவர்கள் ஊக்கம் பெற்று வருகிறார்கள்.
இந்த பயங்கரவாதிகள் மாவோயிஸ்ட்களுடன் கைகோத்துக் கொண்டு நாடு முழுவதும் உள்ள பிரிவினைவாதக் குழுக்களுக்குத் தேவையான ஆயுதங்கள், ராணுவப் பயிற்சிகள் கொடுப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. மத்திய அரசின் கண் எதிரிலேயே ஜனநாயகம் சீர்குலைய அனுமதிப்பது வெட்கக் கேடானது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், பா.ஜ.க. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரை விமர்சிக்கும் தைரியம் சீமானுக்கு எங்கிருந்து வந்தது?
யாசின் மாலிக் ஆதரவால் சீமானுக்கு என்ன லாபம்? காஷ்மீர் பயங்கரவாத சக்திகளிடம் ஏன் இந்த அக்கறை? என்ன ஆதாயம்? என்ற கேள்விகள் எழுகின்றன.
இது தனித் தமிழ்நாடு பிரிவினை விஷம் மீண்டும் ஊன்றப் படவும், இளைஞர்களைத் திசைதிருப்பவும் நடக்கும் நாடகம் என்று விஷயம் அறிந்தவர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். இதனை மாநில அரசு கருத்தில் கொண்டு, முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிக்கு தமிழ்நாட்டில் இடம்கொடுப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் பிரிவினைவாத, பயங்கரவாத தீய சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது என்று தெரிவித்துள்ளார்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications