Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யாசின் மாலிக் போன்றவர்களால் தமிழ்நாடு சிதையும்…. இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலனின் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

Visit of Yasin Malik to TN condemned
சென்னை: இந்து முன்னணித் தலைவர் ராம.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூரில் பொதுக் கூட்ட மாக நடைபெற இருந்த இலங்கைத் தமிழர் படுகொலை நினைவேந்தல் பொதுக் கூட்டத்தில் காஷ்மீர் பயங்ரவாதத் தலைவன் யாசின் மாலிக் கலந்து கொள்வதை இந்து முன்னணி கடுமையாக எதிர்த்தது. அதனை அடுத்து அக்கூட்டத்தை அரங்கத்திற்குள் நடத்தினர். இதனை நடத்தியவர்கள் மீது இந்து முன்னணி வழக்குத் தொடர்ந்திருக்கிறது.

யாசின் மாலிக் காஷ்மீர் பயங்கரவாதி. நம் நாட்டுக்கு எதிராக செயல்படுபவர்.காஷ்மீரில் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த மாணவர்களையும்,இளைஞர்களையும் தூண்டிவிட்டு, ராணுவம் தங்களைத் தற்காத்துக் கொண்டால், இந்திய ராணுவம் அப்பாவி இளைஞர்களைக் கொன்று குவிப்பதாக நாடகமாடி வருபவர்.

ஆரம்பித்திலிருந்து மத்திய அரசு முஸ்லீம் ஓட்டுக்களை ஒட்டுமொத்தமாகப் பெறுவதற்காக பயங்கர வாதிகளிடம் சலுகைகளைக் காட்டி, மென்மையாக நடந்து கொண்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி இன்று அவர் உள்ளூர் தலைவர்களைக் கையில் போட்டுக் கொண்டு நாட்டுக்கு எதிராக விஷத்தைக் கக்கி வருகிறார்.

ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தி, ஜனநாயகத்தை அழிப்பது அவர்களுடைய தந்திரம். ஜனநாயகத்தின் பெயரால் பிரிவினைவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடம் கொடுப்பது ஜனநாயகத்தின் கோழைத்தனம். இந்த பயங்கரவாதி இலங்கைத் தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பதாகப் பேசுவது, சில நல்ல தலைவர்களை தன் வலையில் வீழ்த்தத்தான். தேசியத் தலைவர்கள் பயங்கரவாதத்தை நாசூக்காகக் கையாண்டு வளர்த்து விட்டதால், இவர்கள் ஊக்கம் பெற்று வருகிறார்கள்.

இந்த பயங்கரவாதிகள் மாவோயிஸ்ட்களுடன் கைகோத்துக் கொண்டு நாடு முழுவதும் உள்ள பிரிவினைவாதக் குழுக்களுக்குத் தேவையான ஆயுதங்கள், ராணுவப் பயிற்சிகள் கொடுப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. மத்திய அரசின் கண் எதிரிலேயே ஜனநாயகம் சீர்குலைய அனுமதிப்பது வெட்கக் கேடானது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், பா.ஜ.க. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரை விமர்சிக்கும் தைரியம் சீமானுக்கு எங்கிருந்து வந்தது?

யாசின் மாலிக் ஆதரவால் சீமானுக்கு என்ன லாபம்? காஷ்மீர் பயங்கரவாத சக்திகளிடம் ஏன் இந்த அக்கறை? என்ன ஆதாயம்? என்ற கேள்விகள் எழுகின்றன.

இது தனித் தமிழ்நாடு பிரிவினை விஷம் மீண்டும் ஊன்றப் படவும், இளைஞர்களைத் திசைதிருப்பவும் நடக்கும் நாடகம் என்று விஷயம் அறிந்தவர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். இதனை மாநில அரசு கருத்தில் கொண்டு, முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிக்கு தமிழ்நாட்டில் இடம்கொடுப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் பிரிவினைவாத, பயங்கரவாத தீய சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+