மலேசியாவை உலுக்கிய நால்வர் கொலை... 4 தமிழர்களுக்கு மரண தண்டனை

Subscribe to Oneindia Tamil

Sosilawati murder case: All four accused found guilty and sentenced to death
கோலாலம்பூர்: மலேசியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நான்கு பேர் படுகொலை வழக்கில், நான்கு தமிழர்களுக்கு மரண தண்டனை விதித்து மலேசிய கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

பிரபலமான பெண் அழகுக் கலை நிபுணரும், தொழிலதிபருமான சோசிலாவதி லாவியா உள்ளிட்ட நான்கு பேர் 3 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு அப்போது அது பரபரப்பாக பேசப்பட்டது. அந்த வழக்கில்தான் தற்போது நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நீதிபதி ததுக் அக்தர் தஹிர் அளித்த தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர் பத்மநாபன், அவரது பண்ணை வேலையாட்களான தில்லையழகன், மதன், காத்தவராயன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தூக்குத் தண்டனை அளிப்பதாகவும் அறிவித்தார்.

43 வயதான பத்மநாபன் வக்கீல் ஆவார். இவருக்கு பான்டிங் பகுதியில் ஒரு பண்ணை வீடு உள்ளது. அந்த வீட்டுக்கு கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி சோசிலாவதி, தனது வக்கீல் அகமது கமீல் கரீம், வங்கி அதிகாரியான நூரிஷாம் முகம்மது ஆகியோருடன் போயிருந்தார். இவர்களுடன் சோசிலாவதியின் கார் டிரைவர் கமருதீன் சம்சுதீனும் இருந்தார்.

ஆனால் நான்கு பேரும் பத்மநாபனின் பண்ணை வீட்டிலிருந்து காணாமல் போய் விட்டனர். திரும்பி வரவில்லை. இதுகுறித்து போலீஸில் புகார் தரப்பட்டது. விசாரணையில், நான்கு பேரின் எலும்புக் கூடுகள் பண்ணைக்கு அருகே சிக்கி கண்டுபிடிக்கப்பட்டன.

இதையடுத்து பத்மநாபன் உள்பட நான்கு பேர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நில விவகாரம் தொடர்பாக நான்கு பேரையும் பத்மநாபன் கும்பல் கொலை செய்தது பின்னர் தெரிய வந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+