ஆப்கானிஸ்தான் இந்தியத் தூதரகம் அருகே 3 தொடர் குண்டு வெடிப்புகள்.. துப்பாக்கிச் சூடு
Subscribe to Oneindia Tamil
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்தியத் தூதரகம் அருகே அடுத்தடுத்து 3 பயங்கர குண்டுவெடிப்புகள் நடந்தன. தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தினர். இதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு தாக்குதலிலும் தீவிரவாதிகள் ஈடுபட்டனர்.
மத்திய காபூல் பகுதியில் மிக பலத்த பாதுகாப்பு மிகுந்த பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்தது.
இந்தத் தாக்குதலில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற தகவல் உடனடியாகத் தெரியவில்லை. அந்தப் பகுதியை ஆப்கானிஸ்தானின் ராணுவத்தினரும் போலீசாரும் சுற்றி வளைத்துள்ளனர்.
தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
இந்தப் பகுதியில் தான் ஆப்கானிஸ்தான் மத்திய உளவுப் பிரிவின் மருத்துவமனையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications