வல்லம் அருகே குளத்தில் கவிழ்ந்த தனியார் பேருந்து: 60 பயணிகள் காயம்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே தனியார் பேருந்து குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60 பயணிகள் படுகாயமடைந்தனர்.
இன்று காலையில் திருச்சியிலிருந்து தஞ்சாவூர் நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. வல்லம் அருகே சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த குளத்தில் கவிழ்ந்தது.
அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் பயத்தில் அலறினர். உடனே அருகில் இருந்த பொருமக்களும், கிராமத்தினரும் ஓடிவந்து பயணிகளை உடனடியாக காப்பாற்றினர்.
இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணம் செய்த 60 பயணிகளும் காயமடைந்தனர் அவர்கள் அனைவரும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications