ஸ்ரீசாந்த்தை சந்தித்த அம்மாவும், சகோதரியும்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கிரிக்கெட் சூதாட்டத்தில் கைதாகி போலீஸ் காவலில் உள்ள ஸ்ரீசாந்தை அவரது அம்மாவும், சகோதரியும் நேற்று மாலை சந்தித்தார்கள்.
ராஜஸ்தான் ராயல்ஸ் சார்பில் ஐபிஎல்-ல் விளையாடிய ஸ்ரீசாந்த், சமீபத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கி சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். தற்போது டெல்லி, லோதி காலனியில் உள்ள சிறப்பு செல்லில் விசாரணைக்காக வைக்கப் பட்டுள்ளார் ஸ்ரீசாந்த்.
ஸ்ரீசாந்த்தின் தாயார் சாவித்ரி தேவியும், சகோதரி நிவேதிதாவும் நேற்று மாலை சிறையில் இருக்கும் அவரை சந்தித்துப் பேசினார்கள். இந்த சந்திப்பு போலீஸார் முன்னிலையில் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிகிறது.












Click it and Unblock the Notifications