கிரிக்கெட் வீரர்களுக்கு அழகிகளை சப்ளை செய்தார் விண்டு.. போலீஸ்
மும்பை: கிரிக்கெட் பிக்ஸிங்கிற்கு உடன்பட்ட வீரர்களுக்கு பெண்களை சப்ளை செய்தார் நடிகரும், சூதாட்ட கும்பல்களுக்கும், வீரர்களுக்கும் பாலமாக செயல்பட்ட விண்டு தாராசிங் என்று மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பான சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அந்த வீடியோ பதிவில், விண்டு சிங் குறித்த பல்வேறு பரபரப்பான தகவல்கள் அடங்கியுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

வீரர்களை இழுக்க கேவலமான வழிகள்
ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக விண்டுசிங் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பிக்ஸிங்குக்கு வீரர்களை இழுக்க பல்வேறு கேவலமான வழிகளைக் கையாண்டுள்ளார்.

மாடல்கள், இளம் பெண்கள்
பெண்கள் பலரை வீரர்களுக்கு சப்ளை செய்து அவர்களை வலையில் வீழ்த்தியுள்ளார். இதற்காக மாடல் அழகிகள், நடிகைகள், எஸ்கார்ட் அழகிகள், இளம் பெண்கள் உள்ளிட்டோரை அவர் பயன்படுத்தியுள்ளார்.

ஒரு ராத்திரிக்கு ஒரு லட்சம் ரூவா
ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு நாள் இரவுக்கு ரூ. 1 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளார்.

ராஃபுக்கும் இவரேதான்...
பாகிஸ்தான் நடுவர் அசாத் ராஃபுக்கும் கூட விண்டுதான் பலமுறை பெண்களை சப்ளை செய்ததாக கூறப்படுகிறது. இந்த வேலையில் அவருக்கு புக்கி பவானும் உடந்தையாம்.

மிகப் பெரிய செக்ஸ் ஊழல்
மிகப் பெரிய செக்ஸ் ஊழலில் விண்டுசிங் ஈடுபட்டிருப்பதாகவும் போலீஸார் சொல்கிறார்கள். எனவே அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் மேலும் கடுமையாகும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications