ஸ்பாட் பிக்ஸிங் விவகாரம்: சீனிவாசனுக்கு தமிழக வாசகர்கள் ஆதரவு கர்நாடகம், பிற பகுதிகளில் எதிர்ப்பு
பெங்களூர்: ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசன் பதவி விலகத் தேவையில்லை என்று ஒன்இந்தியா இணையதளத்தின் தமிழ் பதிப்பு வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம், கர்நாடகம் உள்ளிட்ட பிற பகுதிகளில் சீனிவாசன் விலக வேண்டும் என்று பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தமிழக வாசகர்கள் மத்தியில் சீனிவாசனுக்கு ஆதரவு காணப்படுகிறது. அதேசமயம் நாட்டின் பிற பகுதிகளில் எதிர்ப்பே நிலவுகிறது.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, சீனிவாசனுக்கு எதிராக 7603 பேரும், ஆதரவாக 5287 பேரும் வாக்களித்துள்ளனர்.

தமிழ் வாசகர்கள் ஆதரவு
ஒன்இந்தியாவின் தமிழ்ப் பதிப்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் சீனிவாசனுக்கு ஆதரவாக 4875 வாக்குகள் பதிவாகியுள்ளன. எதிராக 3968 பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு
கர்நாடகத்தி்ல சீனிவாசனுக்கு நல்ல எதிர்ப்பு காணப்படுகிறது. அதாவது ஆதரவாக 246 ஓட்டுக்களும், எதிராக 3221 ஓட்டுக்களும் கிடைத்துள்ளன.

பிற பகுதிகளிலும் எதிர்ப்பு
அதேபோல பிற பகுதிகளிலும் சீனிவாசனுக்கு எதிர்ப்பே ஜாஸ்தியாக இருந்தது. அதாவது 414 வாக்குகள் எதிராகவும், ஆதரவாக 166 வாக்குகளும் கிடைத்துள்ளன.

சீனிவாசனுக்கு பரூக் அப்துல்லா ஆதரவு
இதற்கிடையே, சீனிவாசனுக்கு ஜம்மு காஷ்மீர் மாநில கிரிக்கெட் சங்கத் தலைவரும், முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications