மெய்யப்பனைப் பார்க்க தனி விமானத்தில் கிளம்பிய தாயார், மனைவி!

Subscribe to Oneindia Tamil

மதுரை: சூதாட்டப் புகாரில் சிக்கி கைதாகி மும்பை சிறையில் உள்ள குருநாத் மெய்யப்பனைப் பார்க்க அவரது தாயார் லலிதா மற்றும் மனைவி ரூபா ஆகியோர் தனி விமானத்தில் மும்பை சென்றனர்.

கோடை விடுமுறையைக் கழிக்க குடும்பத்துடன் பிசிசிஐ தலைவர் சீனிவாசன், அவரது மருமகன் குருநாத் கொடைக்கானல் சென்றிருந்த போதுதான் இந்த சூதாட்ட சர்ச்சை விஸ்வரூபம் எடுத்தது.

இதைத் தொடர்ந்து மும்பை போலீஸ் குருநாத்துக்கு சம்மன் அனுப்ப, அவர் கொடைக்கானலிலிருந்து மதுரை வந்து, அங்கிருந்து விமானத்தில் மும்பை சென்று விசாரணைக்க ஆஜராகி, சூதாட்டத்தில் தனக்கிருந்த தொடர்பை ஒப்புக் கொண்டார். உடனடியாக கைது செய்யப்பட்டார். நாளை வரை அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Gurunath Meiyappan's wife Rupa and his mother Lalitha

இந்த நிலையில் மெய்யப்பனின் தாயார் லலிதா மற்றும் மனைவி ரூபா ஆகிய இருவரும் திங்கள்கிழமை மாலை கொடைக்கானலில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு வந்தனர்.

பின்னர் இருவரும், மாலை 6.50 மணியளவில் தனி விமானத்தில் மும்பைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

இவர்கள் குருநாத் மெய்யப்பனை சந்திக்கிறார்கள். அப்போது இவர்களிடம் மும்பை போலீசார் விசாரணை மேற்கொண்டால் அதற்கு ஒத்துழைப்பதற்காக மும்பை போலீசுக்கு உறுதி அளித்துள்ளார்களாம்.

ரூபா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவர். இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+