ஐ.பி.எல். சூதாட்டம்... தலைமறைவாக இருந்த சென்னை ஓட்டல் அதிபர் போலீசில் சரண்?

நடிகர் விண்டூ, குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டதையடுத்து, சென்னை எழும்பூரில் உள்ள ரேடிசன் ப்ளு ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வால் தலைமறைவானார் என்றும், தலைமறைவாகி உள்ள அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், குருநாத் மெய்யப்பனை, நடிகர் விண்டூவுக்கு ஓட்டல் அதிபர்தான் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தனது மனைவி பெயரில் சிம்கார்டு வாங்கி தரகர் கிட்டியுடன் ஓட்டல் அதிபர் 100 முறை பேசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஓட்டல் அதிபர் வீட்டில் நடந்த சோதனையில் சிம்கார்டு சிக்கவில்லை. எனவே விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சூதாட்ட தரகர்களுக்கு அடைக்கலம் கொடத்த புகாரின் பேரில் ரேடிசன் ப்ளு ஹோட்டலில் சோதனை நடைபெற்றது.
இந்தநிலையில் ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக தலைமறைவாக இருந்து வந்த விக்ரம் அகர்வால் சென்னை சிபிசிஐடி தலைமையகத்தில் சரண் அடைந்தார் என்றும், அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications