திஹார் ஜெயிலுக்குப் புறப்பட்டார் ஸ்ரீசாந்த்- ஜூன் 4 வரை சிறைவாசம்
Subscribe to Oneindia Tamil

போலீஸ் காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து மூவரும் இன்று டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஜூன் 4ம் தேதி வரை திஹார் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து மூவரும் பாதுகாப்புடன் சிறைக்கு்க கொண்டு செல்லப்பட்டனர்.
முன்னதாக மேலும் 2 நாள் காவலை அனுமதிக்குமாறு காவல்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதை கோர்ட் ஏற்கவில்லை.
மேலும் சவான் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவையும் நீதிபதி நிராகரித்து விட்டார். சவானுக்கு ஜூன் 2ம் தேதி திருமணம் நடக்கவுள்ளது. இதற்காகவே அவர் ஜாமீன் கேட்டிருந்தார். ஆனால் நீதிபதி நிராகரித்து் விட்டதால் அவரது கல்யாணம் கேள்விக்குறியாகியுள்ளது.
மூன்று கிரிக்கெட் வீரர்களும் மே 16ம் தேதி மும்பையில் வைத்து டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications