சீனா: டாய்லெட்டில் பிளஷ் செய்யப்பட்ட பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்பு

சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பணக்கார மாகாணமான ஜெஜியாங்கில் உள்ள ஜின்ஹுவாவில் இருக்கும் அபார்ட்மென்ட் ஒன்றில் கடந்த சனிக்கிழமை மதியம் 4வது மாடியில் உள்ள கழிவறையில் இருந்து பச்சிளம் குழந்தை அழும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்துள்ளது. இதையடுத்து அந்த அபார்ட்மென்ட்டில் உள்ளவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் வந்து பார்த்தபோது கழிவறையில் குழந்தை பிளஷ் செய்யப்பட்டு பைப்பில் சிக்கித் தவித்தது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் குழந்தையை எடுக்க முயன்றும் முடியவில்லை. பின்னர் கழிவறை பைப்புடன் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மருத்துவர்கள் குழந்தையை பைப்பில் இருந்து வெளியே எடுத்தனர்.
அது பிறந்து 2 நாட்களே ஆன தொப்புள் கொடி கூட வெட்டப்படாத குழந்தை. பைப்பில் சிக்கியதில் அதன் முகம் மற்றும் கையில் காயம் ஏற்பட்டிருந்தது. சிகிச்சைக்குப் பின் குழந்தை தற்போது நலமாக உள்ளது. குழந்தையின் பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications