காப்பி அடித்து பிடிபட்ட அவமானம்: 4வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை
ஹைதராபாத்: தேர்வில் காப்பியடித்த இன்ஜினியரிங் மாணவி கையும் களவுமாக பிடிபட்டார். தேர்வு அறையை விட்டு வெளியேற்றப்பட்ட அவமானத்தில் கல்லூரியின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஹைதராபாத் தூண்டிகல் பகுதியைச் சேர்ந்த சீனிவாசராவின் மகள் அஸ்வினி (19). இவர் அங்குள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார். தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடை பெற்று வருகின்றன.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற கணித தேர்வில் அஸ்வினி காப்பி அடித்துள்ளார். இது தேர்வு மைய கண்காணிப்பாளரால் கண்டுபிடிக்கப்பட்டு, அஸ்வினி எச்சரிக்கப்பட்டார். அத்தோடு அஸ்வினியின் விடைத்தாளை பறிமுதல் செய்த தேர்வு மைய கண்காணிப்பாளர் அவரை தேர்வு மையத்தில் இருந்து வெளியேற்றியுள்ளார்.
அறையை விட்டு வெளியே வந்த அஸ்வினி, யாரும் எதிர்பாராத வேளையில் திடீரென கல்லூரியின் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். உடனடியாக ஆஸ்பத்திரிக்கு தூக்கி செல்லப்பட்ட அஸ்வினி, வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
அவமானம் தாங்காமல் மாடியில் இருந்து குதித்து அஸ்வினி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால், கல்லூரியில் பெரும் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications