ஜெத்தாவில் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் இந்திய சங்க பிரதிநிதிகள் சந்திப்பு
ஜெத்தா: வட்டியில்லா வங்கி இந்தியக் குழுமத்தின் ஜெத்தா பிரிவு நிர்வாகிகள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை 26.05.2013 அன்று மாலை சந்தித்து மகஜர் அளித்தனர்.
அந்த மகஜரில் சவுதி அரேபியாவில் வாழ்ந்து வரும் இந்தியர்கள் தாயகத்தில் நல்ல முறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவும், வட்டியில்லா வங்கி முறைகளை ஏற்படுத்திடவும் கோரிக்கை விடுத்தனர்.

உலகில் 70க்கும் மேற்பட்ட நாடுகள் வட்டியில்லா வங்கியியல் முறைகளை செயல்படுத்தி வருகின்றன. பல்வேறு மேற்கத்திய வங்கிகளும் இம்முறைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
இந்த சந்திப்பின்போது அமைப்பின் நிர்வாகிகள் முனீர், உஸ்மான், அமீர் அலி, முஹம்மது அலி, சலீம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்திய தூதரகத்தின் சார்பில் ஜெத்தாவில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications