விருந்தை சாப்பிட்டு விட்டு மரணத்தை பரிசாக அளித்த தலிபான்கள்: 7 போலீசார் பலி
காந்தகார்: போலீசார் வாங்கித் தந்த உணவை வயிறாற சாப்பிட்டு விட்டு, அவர்களையே தங்கள் துப்பாக்கிகளுக்கு விருந்தாகி விட்டு தப்பிச் சென்றுள்ளனர் இரண்டு தாலிபான் தீவிரவாதிகள். இச்சம்பவத்தில் 7 போலீசார் கொல்லப்பட்டனர்.
ஆட்சி மாற்றம் வேண்டி தலிபான்கள், ஆப்கானிஸ்தானில் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ‘அரபு வசந்தம்' என்ற பெயரில் கடந்த மாதம் அதிரடித் தாக்குதலை ஆரம்பித்த இவர்களின் தற்போதைய முக்கிய குறிக்கோள் ஆப்கன் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரை கொல்வது தான்.
இந்நிலையில், நேற்று இரவு காந்தகார் மாகாணத்தில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடிக்கு வந்த இரண்டு நபர்களுக்கு அங்கேயே தங்க அனுமதியும் அளித்து, இரவு உணவும் வாங்கிக் கொடுத்து உபசரித்துள்ளனர் பணியில் இருந்த போலீசார். ஆனால், சாப்பிட்டு முடிந்த கையோடு, அந்த நபர்கள் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக போலீசாரை நோக்கி சுட்டனர்.
இந்த திடீர் தாக்குதலில் 7 போலீசார் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலத்த காயம் அடைந்த ஒருவர் மருத்துவமனியில் சிகிச்சை பெற்று வருகிறார். குற்றவாளிகள் போலீஸ் ஜீப்பிலேயே, சோதனைச்சாவடியில் இருந்த ஆயுதங்களை அள்ளி போட்டுக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக காவல் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "தாக்குதல் நடத்திய 2 பேரும் இதற்கு முன்னர் காவல்துறையில் பணியாற்றியவர்கள். ஆனால் வேலையை விட்டு சென்றுவிட்டனர். அதன்பின்னர் மீண்டும் போலீசில் சேர விரும்புவதாக கூறியுள்ளனர். ஆனால் விருந்து சாப்பிட்டதும் போலீசாரையே கொன்றுவிட்டனர்" என்றார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications