தமிழக சட்டசபை நடப்பு கூட்டத் தொடர் முறைப்படி முடிவுக்கு வந்தது!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டசபையின் நடபுக் கூட்டத் தொடரை முறைப்படி ஆளுநர் ரோசைய்யா முடித்து வைத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக சட்டசபை செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்திய அரசியல் சட்டம் 174 விதி பிரிவின் 2 ன்படி ஆளுநருக்குக்குரிய சிறப்பு அதிகாரத்தின் கீழ் 2013 ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதி தொடங்கப்பட்ட தமிழக சட்டசபை கூட்டத் தொடரை இந்த அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் தமிழக ஆளுநர் டாக்டர் ரோசைய்யா முடித்து வைத்துள்ளார் என கூறப்பட்டுள்ளது.
அடுத்த சட்டசபை கூட்டத் தொடர் குறித்த அறிவிப்பை ஆளுநர் முறையாக வெளியிடுவார்.












Click it and Unblock the Notifications