நம்பர் 2 தலிபான் தலைவர் வலி உர் ரஹ்மான் அமெரிக்க தாக்குதலில் பலி?
பெஷாவர்: தலிபான் அமைப்பின் 2வது முக்கியத் தலைவரான வலி உர் ரஹ்மான் அமெரிக்க துரோன்தாக்குதலில் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன.
துரோன்களை பயன்படுத்துவதில் அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்த கட்டுப்பாடுகளுக்குப் பின்னர் நடந்துள்ள முதல் பெரும் பலி இது என்று கூறப்படுகிறது.
ஆளில்லாத விமானம் மூலம் ஏவப்பட்ட இரண்டு துரோன்கள், வடக்கு வசிரிஸ்தானில் உள்ள மிரன் ஷா என்ற இடத்திற்கு அருகே உள்ள ஒருகிராமத்தைத் தாக்கியது. அதில்தான் வலி உர் ரஹ்மான் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கி்றன.
இந்த தாக்குதலால் பாகிஸ்தானின் புதிய பிரதமராகியுள்ள நவாஸ் ஷெரீப்புக்கு புதுச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தம் 7 பேர் இந்த தாக்குதலில் பலியானதாக கூறப்படுகிறது. அதில் வலி உர் ரஹ்மானும் ஒருவர் என்று பாகிஸ்தான் உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் 2வது முக்கியத் தலைவர் இந்த ரஹ்மான். இருப்பினும் ரஹமான் இறந்து விட்டாரா என்பது குறித்து இதுவரை தலிபான் அமைப்பு உறுதிப்படுத்தவில்லை.












Click it and Unblock the Notifications