சாப்பிட வாங்க...சினிமாவை விட பணம் கொழிக்கிறதாம் ஹோட்டல் பிசினஸில்!!!
மும்பை: சினிமாத் துறையை விட இந்தியாவில் மிகப் பெரிய துறையாக ஹோட்டல் துறை விளங்குகிறதாம்.அதாவது வருடத்திற்கு கிட்டத்தட்ட 48 பில்லியன் டாலர் அளவுக்கு ஹோட்டல் துறையில் புழக்கம் உள்ளதாம்.
இந்தியாவில் மிகப் பெரிய அளவில் வருமானம் ஈட்டும் துறையாக சினிமாவைத்தான் பலரும் கருதுகிறார்கள். ஆனால் அதைத் தூக்கிச் சாப்பிடுவதாக உள்ளது ஹோட்டல் துறை.
சினிமாத் துறை மூலம் வருடத்திற்கு 2 பில்லியன் டாலர் அளவுக்கு பணம் புரளுகிறது என்றால் ஹோட்டல் துறையில் 48 பில்லியன் டாலராக அது உள்ளது.

மிகப்பெரிய லட்டாம்...
இந்தியாவின் தொலைத் தொடர்புத்துறையை விட மிகப் பெரிய துறையாகவும் ஹோட்டல் உள்ளது. இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் நிறையப் பேர் இருந்தாலும் கூட உணவுப் பொருள் விற்பனை படு சூடாகவே உள்ளது என்பதையே இது காட்டுகிறது.

ஹோட்டலின் ‘விஸ்வரூபம்’....
ஹோட்டலுக்குப் போய் சாப்பிடுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் எகிறிக் கொண்டே போகிறதாம். இவர்களால்தான் ஹோட்டல் துறையானது மிகவும் பெரிய துறையாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது என்று தேசிய ஹோட்டல் சங்கத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

சுவையைத் தேடி...
இந்தியாவின் நகர்ப்புற மக்களின் வருமானம் முன்பை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. வாழ்க்கை முறை மாறியுள்ளது. உணவுப் பழக்க வழக்கங்கள் மாறி விட்டன. செலவு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து விட்டன. சுவையைத் தேடி மக்கள் வெளியே வரத் தொடங்கி விட்டனர். இதுவே இந்தத் துறையின் விஸ்வரூப வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாம்.

பாஸ்ட் புட்...
பாஸ்ட் புட் துறையில் மட்டும் 70 சதவீத வளர்ச்சி காணப்படுகிறதாம். பப்புகள், பார்கள், கிளப்கள், லவுஞ்சுகளின் பங்கு 12 சதவீதமாகும்.

அவுட்டிங்...
இன்றைய மக்களுக்கு ஹோட்டல் சாப்பாடு என்பது நல்லதொரு பொழுதுபோக்கு அம்சமாகவும் மாறியுள்ளதாக நிபுணர்கள் சொல்கிறார்கள்.

வெளிநாட்டு உணவகங்கள் வருகை...
இந்தியாவில் ஹோட்டல் மற்றும் உணவுப் பொருள் துறை நல்ல வளர்ச்சியைக் கண்டு வருவதால் பல ஹோட்டல்கள் மேலும் பல கிளைகளைத் திறக்க ஆயத்தமாகி வருகின்றனர். அதேபோல ஐரோப்பிய, அமெரிக்க ஹோட்டல் நிறுவனங்கள் இந்தியாவுக்குள் கால் பரப்ப காத்துள்ளன. லண்டனின் பிரபலமான பிங் பாங் விரைவில் இந்தியாவுக்கு வருகிறது. அதாவது அடுத்த மாதம் இது மும்பையில் கிளையைத் தொடங்குகிறது. அதேபோல நோபு, கார்லுக்காய்ஸ் போன்றவையும் இந்தியாவுக்கு வருகின்றன. ஆனால் இத்துறையில் சீனா ஏற்கனவே முன்னணியில் உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications