இந்தியாவில் ஆதார் அட்டை பெற்ற நாய்.. சேர்... மரம்...!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நாய், சேர், மரம் போன்றவற்றின் புகைப்படங்கள் ஆதார் அட்டையில் குடிமக்களின் புகைப்படத்திற்கு பதிலாக பதிவாகி பரபரப்பை கிளப்பியுள்ளன.

ஆதார் கார்டு தயாரிக்கும் பணியில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக சில கார்டுகளில் சம்பந்தப்பட்டவரின் புகைப்படத்திற்குப் பதிலாக சேர், மரம் போன்றவை பதிவாகியுள்ளன. காமெடியாக சில கார்டுகளில் நாய் போன்ற விலங்குகளின் புகைப்படங்கள் உள்ளனவாம்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகார்களிடம் விளக்கம் கேட்கப்பட்ட போது, இது தங்களின் தவறல்ல. ஆனால் எங்கோ தவறு நடந்திருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘ சில புகைப்படங்களில் வெறும் சேர் மட்டும் இருக்கும் மாதிரியானவை தகவல் சேகரித்தவர்களின் அஜாக்கிரதையால் உண்டானவை. நாங்கள் புகைப்படத்துடன் விரல் ரேகையையும் சரி பார்த்தே கார்டுகள் வழங்க உள்ளோம். தெளிவாக இல்லாத காரணத்தால் கூட இந்த தவறுகள் நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் உள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட அதிகார்களை நேரில் அனுப்பி தவறுகளை சரி செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.

யுஐடிஎஐ அதிகாரி அசோக் தல்வாய் இதுகுறித்து கூறியதாவது, ‘ சில நேரங்களில் தகவல் சேகரிக்கப் போனவர்கள், குடிமக்களிடம் எங்கே கைரேகை வைக்க வேண்டும் என செய்து காட்டும் போது, தவறுதலாக அங்கே அவர்களது கைரேகை பதிந்து விடுகிறது' எனக் கூறியுள்ளார்.

மேலும், ‘நாங்கள் நான்கு வழிமுறைகளில் நம்பகத்தன்மையை நிரூபிக்க செய்துள்ளோம். ஆனால், அதையும் தாண்டி சில நேரங்களில் இவ்வாறு தவறு நடை பெற்று விடுகிறது' என்றார்.

ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விண்ணப்பித்தோருக்கு விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+