கேரளாவில் தொடங்கியது பருவ மழை.. செங்கோட்டை, தென்காசி, குற்றாலத்திலும் 'ஜில் ஜில்' மழை
செங்கோட்டை: தென் மேற்குப் பருவ மழை ஜூன் 2ம் தேதி வரலாம் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிற்பகலுக்கு மேல் கேரளாவில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் தென் மேற்குப் பருவ மழை முன்கூட்டியே தொடங்கி விட்டதாக கருதப்படுகிறது.
கேரளத்தையொட்டியுள்ள தமிழகப் பகுதிகளான தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் உள்ளிட்ட நெல்லை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னதாக ஜூன் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போதைய நிலையைப் பார்த்தால் மழை முன்கூட்டியே தொடங்கி விட்டதாக தெரிகிறது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
கேரளாவில்தான் தென் மேற்குப் பருவ மழை முதலில் தொடங்கும். பின்னர் படிப்படியாக இது நாடு முழுவதும் பரவும். தமிழகத்தைப் பொறுத்தவரை தென் மேற்குப் பருவ மழையால் நமக்கு மழை குறைவாகவே கிடைக்கும்.
ஆனால் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு இந்த மழைதான் மிகப் பெரிய வரப்பிரசாதமாகும். அதாவது காவிரி உற்பத்தியாகும் பகுதிகளில் மிக நல்ல மழை பெய்யும். கேரளப் பகுதிகளிலும் மழை பெய்யும். இதன் காரணமாக கர்நாடகத்தில் உள்ள அணைகள் நிரம்பி நமக்குத் தண்ணீர் கிடைக்க வழி ஏற்படும்.
எனவே இந்த மழை சிறப்பாக இருந்தால் அது காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்ச அளிக்கும் செய்தியாக அமையும்.
தென் மேற்குப் பருவ மழை செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். வழக்கமாக ஜூன் 1ம் தேதி மழை தொடங்க வேண்டும். ஆனால் இடையில் வங்கக்கடலில் வந்த மகாசேன் புயலால் ஈரப்பதத்தை அது உறிஞ்சிக் கொண்டு போய் விட்டது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications