தொடர்ந்து 6வது ஆண்டாக, 'ஸ்கிரிப்ஸ் ஸ்பெல்லிங் பீ ' யில் இந்திய வம்சாவளி மாணவன் வெற்றி
வாஷிங்டன்: கடந்த 5 ஆண்டுகளைப் போலவே, இந்தாண்டும் இந்திய வம்சாவழி மாணவனே, அமெரிக்க ஆங்கில எழுத்தறிவு போட்டியான ‘ ஸ்கிரிப்ஸ் ஸ்பெல்லிங் பீ' போட்டியில் முதலிடம் வென்று சாதனை படைத்துள்ளான்.
கடந்த 6 ஆண்டுகளாக அமெரிக்க வாழ் இந்திய மாணவர்களே இப்போட்டியில் தொடர்ந்து முதலிடம் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில், லாப நோக்க மற்ற அமைப்பு ஒன்று வருடந்தோறும் மாணவர்களின் திறமையை வெளிக்கொணரும் வகையில் ஆங்கில எழுத்தறிவுப் போட்டியை நடத்தி வருகிறது.
'ஸ்கிரிப்ஸ் ஸ்பெல்லிங் பீ ' என்ற இந்த ஆங்கில எழுத்தறிவுப் போட்டியில், வழக்கம் போல இந்த ஆண்டும் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் இருந்து வந்த 281 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், அமெரிக்க வாழ் இந்திய மாணவர் அரவிந்த்(13) வெற்றி பெற்றுள்ளார். 8ம் வகுப்பு படித்து வரும் அரவிந்த் அறிவியலிலும் கணிதத்திலும் ஆர்வம் கொண்டவராம். இயற்பியல் துறையில் வல்லுனராக வருவதே இம்மாணவரின் எதிர்கால லட்சியம் என தெரிவித்துள்ளார்.
கடந்த 3 ஆண்டுகள் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்ட அரவிந்த், முறையே. அதில் 2011 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் 3 வது இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..












Click it and Unblock the Notifications