பிக்ஸிங் விவகாரம்..: நாளை பிசிசிஐ அவசர செயற்குழுக் கூட்டம்- சீனி ராஜினாமா அறிவிப்பு?

ஐபிஎல் பிக்ஸிங் விவகாரம் பெரும் புயலாக உருவெடுத்து இப்போது பிசிசிஐ தாக்கி வருகிறது. பிக்ஸிங் விவகாரத்தில் பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கைதானதால் அவருக்கு நெருக்கடி அதிகரித்தது. அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஊடகங்கள் வலியுறுத்தின. ஆனால் பிசிசிஐ நிர்வாகிகள் மெளனம் காத்தனர். இந்த நிலையில் மெல்ல மெல்ல சீனிவாசன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பிசிசிஐ நிர்வாகிகளும் வலியுறுத்தத் தொடங்கினர். மேலும் பிசிசிஐ செயலர் மற்றும் பொருளாளர் நேற்று ராஜினாமாவும் செய்தனர். மேலும் பிசிசிஐயின் 5 துணைத் தலைவர்களும் இன்று ராஜினாமா செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. அதேபோல் பிசிசிஐ துணைத் தலைவரான அருண் ஜேட்லியும் இன்று முக்கியமான செய்தி வரும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நாளை காலை 11 மணிக்கு சென்னையில் பிசிசிஐயின் அவசர செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக் கூட்டத்தில் பிக்ஸிங் விவகாரம், சீனிவாசனின் ராஜினாமா உள்ளிட்ட அனைத்து விவகாரங்களும் விவாதிக்கப்பட இருக்கின்றன. அனேகமாக நாளைய கூட்டத்தில் சீனிவசன் தமது












Click it and Unblock the Notifications