பண்டல் பண்டலாக சிகரெட் கடத்திய ஏர் இந்தியா பணியாளர்..லண்டன் போலீசிடம் சிக்கினார்!
மும்பை: இங்கிலாந்து சென்ற ஏர் இந்தியா விமானத்தில் சிகரெட் பண்டல்களை கடத்தியதாக அதன் பணியாளர் ஒருவர் ஹீத்ரு விமான நிலையத்தில் 8 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டார். பின்னர் 5 ஆயிரம் பவுண்டுகள் கட்டியபிறகே அவர் விடுவிக்கப்பட்டார்.
மும்பையில் இருந்து லண்டனுக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று ஏர் இந்தியா விமானம் சென்றது. லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய பின்னர் ஏர் இந்தியா பணியாளர்கள் ஹோட்டலுக்கு செல்லும் போது போலீசார் அவர்களை சோதனையிட்டனர். அப்போது பவிக் ஷா என்ற பணியாளரிடம் 50 சிகரெட் பண்டல்கள் இருந்துள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் துருவித் துருவி 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். ஒருவழியாக அந்த சிகரெட் பண்டல்கள் தமக்குரியதுதான் என்று ஷா ஒப்புக் கொண்டார். இதனால் அவர் விமான நிலையத்திலேயே 8 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டார்.
பின்னர் ஏர் இந்தியா நிறுவனம் 5 ஆயிரம் பவுண்டுகள் கட்டி அவரை பிணையில் விடுவித்தது. இருப்பினும் அதே நாளில் ஷாவை ஏர் இந்தியா நிறுவனம் சஸ்பென்ட் செய்துவிட்டதாகவும் அறிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications