இந்தியாவை இந்து நாடாக பிரகடனப்படுத்த வலியுறுத்துவோம்- அர்ஜூன் சம்பத் !
காரைக்குடி: ஜூன் 6 ம் தேதி முதல் 10 வரை, கோவாவில் இந்து ஜன ஜாக்கிரதி சமிதி சார்பில், அனைத்து இந்து அமைப்புகள் மாநாடு நடக்கிறது. இந்தியாவை இந்து நாடாக பிரகடனப்படுத்த வலியுறுத்துவோம் என இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
இது குறித்து காரைக்குடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாவது :-
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் சுவாமி தரினம் செய்ய பணம் கொடுத்து தரிசனம் செய்ய வேண்டி உள்ளது. இந்த நிலையை மாற்றி, பணம் இன்றி சுவாமி தரிசனம் செய்ய அரசு உரிய நவடிக்கையை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் 30 ஆயிரம் அறநிலையத்துறை கோயில்களில் அறங்காவலர் குழு நியமிக்கப்படவில்லை. கிறிஸ்தவர், முஸ்லீம்களுக்கு வாரியம் உள்ளது போன்று, இந்துக்களுக்கு அறவோர் வாரியம் அமைக்க வேண்டும்.
இந்துக்களின் புனித இடமான கைலாயத்திற்கு தமிழகத்தில் இருந்து பல ஆயிரம் பேர் செல்கின்றனர். இவர்களை ஊக்குவிக்கும் வகையில் கைலாயம் செல்வோருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து. ஆனால், கடந்த இரண்டு ஆண்டாக கைலாயம் செல்வோருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.20 ஆயிரம் வழங்கப்படவில்லை.
குதிரை ரேஸ், சீட்டாட்டம், சேவல் சண்டை, ஆட்டு சண்டை சூதாட்டம் என்பதால் அவற்றிற்கு தடை உள்ளது. கிரிக்கெட்டும் சூதாட்டமாகி விட்டதால், அதை தடை செய்ய வேண்டும்.
வரும் பாராளுமன்ற தேர்தலில், அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு, தமிழகம் பாடம் புகட்ட வேண்டும். அப்படி பாடம் புகட்ட வேண்டும் என்றால், தமிழகத்தில், தே.மு.தி.க., பா.ஜ., பா.ம.க., ம.தி.மு.க. போன்ற கட்சிகள் இணைந்து மூன்றாவது அணி அமைக்க வேண்டும்.
ஜூன் 5 ம் தேதி முதல் 10 வரை, கோவாவில் இந்து ஜன ஜாக்கிரதி சமிதி சார்பில், அனைத்து இந்து அமைப்புகள் மாநாடு நடக்கிறது. இந்தியாவை இந்து நாடாக பிரகடனப்படுத்த வலியுறுத்தப்படும்' என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications