தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகள்: தகவல் ஆணையம்!
டெல்லி: தகவல் அறியும் உரிமை சட்டம் அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும் என்று இந்திய தலைமை தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து தப்பித்துக் கொண்டிருந்த அரசியல் கட்சிகளுக்கு இப்போது தலைமை தகவல் ஆணையம் கடிவாளம் போட்டிருக்கிறது. மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மற்றும் ஆர்.டி.ஐ. செயற்பாட்டளர் சுபாஷ் அகர்வால் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த த்டலைமை தகவல் ஆணையம் அரசியல் கட்சிகளையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது.
இனிமேல் அரசியல் கட்சிகளுக்கான நிதி, அக்கட்சிகள் செய்யும் செலவு, வேட்பாளர் தேர்வு முறை போன்றவற்றை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய கட்டாயம் அரசியல் கட்சிகளுக்கு இருக்கிறது.இந்த விவரங்களை எழுத்துப்பூர்வமாக அரசியல் கட்சிகள் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்க்கலாம் எத்தனை கட்சிகள் விவரங்களைத் தருகிறது என!












Click it and Unblock the Notifications