ஆர்டிஐ-ல் விண்ணப்பித்த கற்பழிப்பு வழக்கு தம்பதியின் குட்டு உடைந்து ஆயுள்
டெல்லி: டெல்லியில் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் தம்பதி தகவல் அறியும் சட்டத்தில் விவரம் கேட்டு விண்ணப்பிக்க அவர்களின் சிறை தண்டனை ஆயுள் தண்டனையாக மாறியுள்ளது.
கடந்த 2004ம் ஆண்டில் டெல்லியில் மைனர் பெண்ணை கற்பழித்த குற்றத்திற்காக சேத் என்பவருக்கும், அந்த குற்றத்திற்கு துணை போன அவரது மனைவி உஷா ராணிக்கும் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் அதே ஆண்டில் ஜூன் மாதம் வெளிவந்த செய்தித்தாளில் காஷ்மீர் கேட்டில் கையில் வாசிரோ பாய் என்று பச்சைக் குத்தப்பட்டிருந்த பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது என்று புகைப்படத்துடன் கூடிய செய்தி வந்திருந்தது. இதைப் பார்த்த சேத் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அந்த பெண்ணை பற்றிய விவரங்கள் கேட்டு விண்ணப்பித்தார்.
தன்னை தவறாக கற்பழிப்பு வழக்கில் கைது செய்ததாகவும், மைனர் பெண் தன்னுடைய சகோதரர்கள் 2 பேரும், வாசிரோ பாய் என்ற தனது தாயும் காணாமல் போனதற்கும் தன் மீது பழிபோட்டார் என்றும் சேத் அந்த விண்ணப்பத்தில் தெரிவித்திருந்தார். அவரது விண்ணப்பம் குறித்து விசாரணை நடத்தியபோது தெரிய வந்த தகவல் வருமாறு,
சேத் மற்றும் உஷா ராணி 2004ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி மைனர் பெண் அவரின் தாய் வாசிரோ, சகோதரர்கள் சில்லு, ஆஷூ ஆகியோரை பாஹர் கஞ்ச்சில் உள்ள தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். அங்கு அவர்கள் வாசிரோ மற்றும் சிறுவர்களை கொன்றுள்ளனர். சேத் அந்த சிறுமியை கற்பழித்துவிட்டு விபச்சாரத்தில் தள்ளிவிட்டுவிட்டார்.
சிறுமிக்கு தனது குடும்பத்தார் கொல்லப்பட்டது தெரியாததால் தான் கற்பழிக்கப்பட்ட வழக்கில் அந்த தம்பதிக்கு எதிராக சாட்சி அளித்தார். இதையடுத்து கணவனுக்கும், மனவைிக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அவர்கள் 3 பேரை கொன்ற விவகாரம் தெரியவே அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications