For Daily Alerts
Just In
பாகிஸ்தான் தூதரின் கார் மீது டூ வீலரால் மோதிய பெண் கைது
டெல்லி: டெல்லியில் பாகிஸ்தான் தூதரின் கார் மீது டூ வீலரால் மோதிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் பெண் மீதும் பின்னால் அமர்ந்திருந்த அவரது உறவினர் மீதும் அதி வேகமாகவும் அலட்சியமாகவும் டூ வீலர் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் சிர்காம் ராசாவின் கார் மீது இந்த டூ வீலர் மோதியதையடுத்து, அந்தப் பெண்ணுக்கும் கார் டிரைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் விரைந்து வந்து தூதரை பத்திரமாக மீட்டுச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் தூதரகம் மத்திய அரசிடம் தனது அதிருப்தியைத் தெரிவித்தது.
இதையடுத்து அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், காரின் டிரைவர் குடிபோதையில் இருந்ததாக பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Comments
English summary
The Delhi Police have arrested a woman and her nephew, who were travelling on the two-wheeler that hit a Pakistani envoy's car on Monday. Both have been accused of rash and negligent driving, among other charges. The action came after Pakistan issued a strong statement seeking a thorough probe into the incident. Trouble began after Pakistan's First Secretary Zirgham Raza's car hit a woman and her nephew on a two-wheeler and an argument broke out.
Story first published: Tuesday, June 4, 2013, 11:22 [IST]